சிறுவனால் நேர்ந்த விபத்து.. 3ம் வகுப்பு சிறுமியின் உயிர் பிரிந்த சோகம்..! பெற்றோர் கண்ணீர்.!
Tenkasi News: ஆட்டோ மோதி ஏற்பட்ட விபத்தில் சிறுமி உயிரிழந்தார்.
உரிமம் பெறாமல் சிறுவன் இயக்கிய ஆட்டோவால் நேர்ந்த விபத்து சிறுமியின் உயிரை பறித்தது.
பள்ளி சிறுமி:
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், கரும்புளியூத்து கிராமத்தில் வசித்து வருபவர் பீட்டர். இவரின் மகள் ஜீவிதா (வயது 8). சிறுமி மாறாந்தை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இதையும் படிங்க: Namakkal: விஷப்பூச்சி கடித்து சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. கண்ணீரில் பெற்றோர்.!
விபத்து:
இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் சிறுமி பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் வழியில், கடைக்கு சென்றுவிட்டு வந்துகொண்டு இருந்தார். அப்போது, சாலையை கடக்க முயற்சித்தபோது, அவ்வழியாக வந்த ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது.
படுகாயம்:
இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுமியை மீட்ட உள்ளூர் மக்கள், சிகிச்சைக்காக அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுமியின் உயிர் பிரிந்தது.
விசாரணை:
விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சுமை ஆட்டோவை ஒட்டி வந்ததாக 17 வயது சிறுவன், வாகன உரிமையாளரான கணேசன் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதையும் படிங்க: பிஸ்கட் சாப்பிடுவதில் அக்கா-தம்பி சண்டை.. பரிதாபமாக பறிபோன உயிர்.. திண்டுக்கல்லில் சோகம்.!