×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கஞ்சா போதையில் மாமூல் கேட்டு மிரட்டி இளைஞரால் வியாபாரிக்கு நிகழ்ந்த சோகம்... தஞ்சையில் பரபரப்பு!!

கஞ்சா போதையில் மாமூல் கேட்டு மிரட்டி இளைஞரால் வியாபாரிக்கு நிகழ்ந்த சோகம்... தஞ்சையில் பரபரப்பு!!

Advertisement

தஞ்சையை அடுத்த கரந்தை ராஜாராமன் மடத்து தெருவை சேர்ந்தவர் செந்தில்வேல்(75). இவர் கரந்தையில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி இரவு செந்தில்வேல் கடையில் இருந்துள்ளார்.

அப்போது கரந்தை ராஜாராமன் மடத்து தெரு ஹரிகரன்(21), கரந்தை பூக்குளம் பகுதி தினேஷ்(19) ஆகிய இருவரும் கஞ்சா போதையில் செந்தில்வேலின் கடைக்கு வந்து மாமூல் கேட்டுள்ளனர். அதற்கு செந்தில்வேல் மறுப்பு தெரிவித்ததை அடுத்து இருவரும் செந்தில்வேலை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

அதனையடுத்து செந்தில்வேலை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு செந்தில்வேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஹரிஹரன் மற்றும் தினேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வியாபாரி செந்தில் வேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று வணிகர்கள் தஞ்சை கரந்தை பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக கரந்தை கடைவீதி இன்று வெறிச்சோடி காணப்பட்டது.வணிகர்கள் கடையடைப்பையொட்டி தஞ்சை கரந்தை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#75 years old man #Murder #2 youngster #thanjavur
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story