×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

5 வயது சிறுமியிடம் அத்துமீறிய 70 வயது முதியவர்.. போலீசார் அதிரடி நடவடிக்கை!

5 வயது சிறுமியிடம் அத்துமீறிய 70 வயது முதியவர்.. போலீசார் அதிரடி நடவடிக்கை!

Advertisement

சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சிறு வயது குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் புதுச்சேரியில் 9 வயது சிறுமி ஆர்த்தி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி  பரபரப்பை ஏற்படுத்தி  பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் திட்டக்குடி அடுத்த கொடிக்களம் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி மகன் தியாகராஜன் (வயது 70). இவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தையை கூறி வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்று பாலியல் கிண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதனைப் பார்த்த சிறுமியின் உறவினர்கள் சத்தம் போட்டதால், முதியவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதனையடுத்து உடனடியாக சிறுமியின் பெற்றோர் ஆவினங்குடி போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் முதியவர் தியாகராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thittakudi #Kodikalam #Avinangudi #harassment #Crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story