"தாத்தா சிப்ஸு கொடுத்து அப்டி பண்ணினாரு மிஸ்" 2-ம் வகுப்பு குழந்தை சொந்த தாத்தாவால் பாலியல் கொடுமை.!
தாத்தா சிப்ஸு கொடுத்து அப்டி பண்ணினாரு மிஸ் 2-ம் வகுப்பு குழந்தை சொந்த தாத்தாவால் பாலியல் கொடுமை.!

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் வீட்டிற்கு அருகில் இருக்கும் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளிக்குச் சென்ற மாணவி மிகவும் சோர்வாக இருந்த நிலையில் வாந்தி எடுத்துள்ளார். எனவே, அந்த சிறுமியை ஓய்வெடுக்க சொல்லி வகுப்பு ஆசிரியை தெரிவித்துள்ளார்.
சிறுமி வகுப்பில் படுத்து இருந்ததை ரவுண்ட்ஸ் வந்த தலைமை ஆசிரியர் பார்த்துவிட்டு விசாரித்துள்ளார். அப்போது, அந்த பெண் மிகவும் சோர்வாக இருப்பதாகவும், வாந்தி எடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர். பின்னர், சிறுமியை அழைத்து தலைமை ஆசிரியர் என்ன சாப்பிட்டாய் என்று கேட்க தாத்தா வாங்கி கொடுத்த சிப்ஸ் சாப்பிட்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும் இதை தாத்தா யாரிடமும் சொல்லக்கூடாது என்று சொன்னதாக சிறுமி தெரிவித்துள்ளார். அப்போது சிறுமியின் உடல்வாகில் மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்த தலைமை ஆசிரியர் அந்த சிறுமியிடம் தொடர்ந்து விசாரித்ததில் தாத்தா பாலியல் வன்கொடுமை செய்தது பற்றி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காதல் திருமணம் முடிந்த 8 மாதத்தில் தாய் வீடு வந்த தங்கை; முன்விரோதத்தில் நடந்த படுபயங்கரம்.!
உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் வந்து விசாரித்ததில் சிறுமியின் சொந்த தாத்தா அவருக்கு தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து தெரியவந்துள்ளது. உடனே பெற்றோர் அதிர்ச்சி அடைந்து போலீஸிடம் புகார் கொடுத்த நிலையில் தற்போது கிருஷ்ணமூர்த்தி என்ற 69 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: "அம்மா அந்த அங்கிள் என்னை அப்டி பன்னிட்டார்மா" 13 வயது சிறுவனுக்கு நடந்த கொடூரம்.!