×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: வினையான விளையாட்டு: திருமணமாகி 1 மாதமே ஆன இளம்பெண் உட்பட 7 பேர் ஆற்றில் முழ்கி பலி..!

வினையான விளையாட்டு: திருமணமாகி 1 மாதமே ஆன இளம்பெண் உட்பட 7 பேர் ஆற்றில் முழ்கி பலி..!

Advertisement

கடலூரில் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற குழந்தைகள் உட்பட ஏழு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் கீழ் அருங்குணத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் குளிக்க சென்ற திருமணமாகி 1 மாதமே ஆன இளம்பெண், 2 குழந்தைகள் உட்பட ஏழு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

ஆற்றில் குளிப்பதற்காக சிறுமிகள் சுமுதா, பிரியா,மோனிகா, சங்கீதா, பிரியதர்ஷினி கவிதா மற்றும் இளம்பெண் நவநீதா ஆகியோர் சென்றனர்.குளித்துக் கொண்டிருக்கும் போது தடுப்பணைக்கு அருகே  ஏற்பட்ட சுழல் காரணமாக  இரண்டு பேர் நீரில் மூழ்கினர். இதை பார்த்த மற்ற ஐந்து பேரும்  அவர்களைக் காப்பாற்ற சென்றனர், அப்போது அவர்களும்  நீரில் மூழ்கியுள்ளனர். 

நீரில் மூழ்கியவர்களை பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்ட நிலையில் 7 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

ஆற்றில் குளித்த 2 சிறுமிகள், 5 பெண்கள் உட்பட  7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் திருமணமாகி ஒரு மாதமே ஆன இளம்பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Gadilam River #Cuddalore #7 People Dead #govt hospital
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story