7 பேருக்கு தீவிர சிகிச்சை! ஒருவர் பலி! ஓர் குடும்பத்தில் நேர்ந்த பரிதாபம்! இதுதான் காரணமா?
7 members in one family affected by food poision
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வசித்து வந்தவர் செல்வமணி. இவரது குடும்பத்தில் 4 பெண்கள், 3 ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 8 பேர் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென அவர்கள் அனைவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அனைவரும் சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். இந்நிலையில் சிகிச்சை பெற்றுவந்த சொக்கம்மாள் என்ற 80 வயது முதாட்டி உடல்நிலை மோசமாகி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் மற்ற 7 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விசாரணையில் அவர்கள் அனைவரும் நேற்று இரவு கீரை சாதம் சாப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து அனைவரின் அவர்களது வாந்தி மற்றும் மயக்கத்துக்கு உணவுதான் காரணமா அல்லது வேறு காரணம் உள்ளதா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.