×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனைவி இறந்த நிலையில், தந்தையால் 6 வயது மகளுக்கு நேர்ந்த கொடூரம்! பரிசோதனையில் அம்பலமான அதிர்ச்சி உண்மைகள்!

6 year child abused by father after mother dead

Advertisement

பெரம்பூரை சேர்ந்தவர் சியாமளா. 61 வயது நிறைந்த அவர் சமீபத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்புபிரிவுக்கு ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, நான் எனது மூத்தமகளை ஹைதராபாத்தில் வசித்து வந்த சந்தோஷ் பிரேம்குமார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தேன். அவர்களுக்கு 11வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது மகள் உடல்நலகுறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை சென்னைக்கு கொண்டு வந்து அடக்கம் செய்தோம். அதனை தொடர்ந்து எனது மருமகன் மற்றும் குழந்தைகளுடன் சென்னையிலேயே குடியிருந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது பேத்திக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனைத் தொடர்ந்து அவரை நான் மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அங்கு எனது பேத்தியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் எனது பேத்திக்கு  காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு மருந்து அளித்தனர். மேலும் அவர்கள் எனது பேத்திக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். 

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நான் இதுகுறித்து அவளிடம் விசாரித்தபோது, அவர்  தந்தையின் மீது குற்றம்சாட்டினார். எனவே எனது மருமகன் சந்தோஷ் பிரேம்குமார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தார். 

அதனைத் தொடர்ந்து போலீசார் சந்தோஷிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர் அதனை ஒப்புக்கொண்டார். பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#6 year child #Abuse #Mother dead
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story