×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

59 வயதில் தேவையா இது.! திருமண ஆசை காட்டி என்ன ஒரு திருட்டுத்தனம்,அம்பலமான உண்மையால் அதிர்ச்சி.!

59 வயதில் தேவையா இது.! திருமண ஆசை காட்டி என்ன ஒரு திருட்டுத்தனம்,அம்பலமான உண்மையால் அதிர்ச்சி.!

Advertisement

பல பெண்களை திருமணம் செய்வதாக ஆசை காட்டி ஏமாற்றி நகை மற்றும் பணத்தை 59 வயது நபர் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

ஓசூரை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை நபர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தன்னிடமிருந்த பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றதாக சென்னை தாம்பரம் போலீஸ் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார்.

 மேலும் தன்னை ஏமாற்றியவரின்  போன் நம்பரையும் அந்த பெண் போலீசாரிடம் அளித்துள்ளார். இந்நிலையில் அந்த போன் நம்பரை போலீசார் தொடர்பு கொண்டபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது .இந்த நிலையில் தாம்பரம் காவல் நிலையத்திற்கு இதே போன்று மேலும் இரண்டு புகார்கள் வந்தது.

 இதைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட பொலிசார் பல பெண்களை ஏமாற்றி வந்த 59 வயது முருகன் என்பவரை கைது கைது செய்தனர்.

இது குறித்த விசாரணையில் முருகன் தனக்கு இரண்டாவதாக திருமணம் செய்ய பெண் தேவை எனவும், மாத சம்பளம் 50,000 ரூபாய் எனவும் விளம்பரம் செய்துள்ளார் .மேலும் தனது செல்போன் எண்ணையும் கொடுத்துள்ளார் .

பிறகு அதை நம்பி வரும் பெண்களிடம் பேசி தன்னை முழுமையாக நம்ப செய்து அவர்களிடம் ஆசையாக பேசி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்று விடுவார். பிறகு தான் பயன்படுத்திய சிம்கார்டை தூக்கி போட்டு விடுவார். 

59   வயதாகும் முருகன் தனக்கு போதிய வருமானம் இல்லாததால் கீழே கிடந்த செல்போனில் படம் பிடித்த வேலையை செய்து வந்துள்ளார் என தெரிய வந்தது.

 மேலும் முருகனிடமிருந்து 18 சவரன் நகைகள், முப்பதாயிரம் ரூபாய் மற்றும் 40 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து  முருகனை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#girl #cheating #money #jewels
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story