×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

5 சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. 50 வயது பெண் கைது.!

5 சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. 50 வயது பெண் கைது.!

Advertisement

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோவிலாச்சேரி விழுந்தகண்டம் பகுதியை சேர்ந்தவர் கோகிலா. 50 வயதான இவர் கும்பகோணம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் குழந்தைகள் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி அதே பள்ளிகள் படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன் இடைவேளை நேரத்தில் கழிவறைக்கே சென்றுள்ளார். அப்போது சிறுவனை பின்தொடர்ந்து கருவறைக்குள் சென்ற கோகிலா, சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும், இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என சிறுவனை மிரட்டியுள்ளார். ஆனால் அந்த சிறுவன் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தனது அண்ணனிடம் கூறியுள்ளார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் கோகிலா மீது கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் போக்ஸ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thanjavur #harassment #kumbakonam #Kovilachery #arrest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story