×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தந்தையிடம் தகராறு செய்த போதை ஆசாமி.. பழி தீர்த்த 5 சிறுவர்கள்!

தந்தையிடம் தகராறு செய்த போதை ஆசாமி.. பழி தீர்த்த 5 சிறுவர்கள்!

Advertisement

மதுரை மேல் அனுப்பனாடியை சேர்ந்துவர் கருப்பையா என்பவரின் மகன் ரமேஷ். இவர் கட்டுமான பொருட்கள் விற்கும் கடையில் வேலை செய்து வருகிறார். மதுபோதைக்கு அடிமையான இவர் குடித்துவிட்டு அப்பகுதியில் செல்வரிடம் அடிக்கடி தகராறு ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அந்த வகையில் நேற்று இரவு ரமேஷ் வழக்கம் போல் முடித்துவிட்டு கடையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில் மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த 17 வயதான துரைராஜ் என்ற சிறுவனின், தந்தையின் காலில் ரமேஷ் கல்லை எறிந்து பலத்த காயம் ஏற்படுத்தியது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த துரைராஜ் ரமேஷை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதன்படி துரைராஜ் மற்றும் அவரது நண்பர்களான ராஜசேகரன், பகவதி, மீனாட்சி மற்றும் சதீஷ்குமார் ஆகியவுடன் சேர்ந்து கத்தி மற்றும் சுத்தி போன்ற ஆயுதங்களால் ரமேஷை கொடூரமாக தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து சிவகங்கை பதுங்கி இருந்த சிறுவர்கள் 5 பேரையும் தெப்பக்குளம் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#madurai #Anupanadi #Murder #Crime #arrest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story