பச்சை குழந்தைடா.. அங்கன்வாடி மையத்தில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! கொடூரன் கைது! அதிர்ச்சி சம்பவம்!!
பச்சை குழந்தைடா.. அங்கன்வாடி மையத்தில் 4 வயது சிறுமிக்கு அரங்கேறிய பாலியல் அத்துமீறல்.! பேரதிர்ச்சி சம்பவம்!!
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வெண்ண முத்துப்பட்டி என்ற கிராமத்தில் அங்கன்வாடி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 54 வயது நிறைந்த அன்னக்கொடி என்பவர் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் காசி. 60 வயதாகிறது.
இந்த நிலையில், சம்பவதன்று பணியாளரான அன்னக்கொடி தனது கணவரை அங்கன்வாடியில் உள்ள குழந்தைகள் அனைவரையும் பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் குழந்தைகளை கவனித்துகொள்ள அங்கன்வாடியில் இருந்த காசி அங்கு 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அந்த சிறுமி வீட்டிற்கு சென்று தனது அம்மாவிடம் நடந்த அனைத்தையும் கூறியுள்ளது. இதனை கேட்டு ஆவேசமடைந்த அந்த சிறுமியின் தாய் இதுகுறித்து கீரனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து காசி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அன்னக்கொடியையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362