பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 4 மாணவர்கள் உயிரிழப்பு.! கொந்தளித்த சக மாணவர்கள்.!
பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து 2 மாணவர்கள் உயிரிழப்பு.! கொந்தளித்த சக மாணவர்கள்.!
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பொருட்காட்சி திடல் அருகே டவுன் ஷாப்டர் என்ற தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இன்று காலை 11 மணி அளவில் இடைவேளை விடப்பட்ட நேரத்தில் மாணவர்கள் கழிப்பறை சென்றுள்ளனர். அப்போது பள்ளி கட்டிடத்தின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்துள்ளது.
இதில், கழிவறைச்சுவர் அருகே நின்றுகொண்டிருந்த 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 3 மாணவர்களும் மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கழிவறைச்சுவர் இடிந்து விழுந்து 4 மாணவர்கள் உயிரிழந்ததையடுத்து, சக மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் உள்ள பொருட்களை சேதப்படுத்துயும், சாலையில் மறியலில் ஈடுபட்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பழமையான இந்த பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362