×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி கோர விபத்து! 4 பேர் பலி! பலர் படுகாயம்!

4 people died in govt bus accident

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து சென்ற அரசு பேருந்து உளுந்தூர்பேட்டை அருகே சென்றபோது எதிரே சென்ற காரில் பேருந்து லேசாக மோதியது. இதனால் கீழே இறங்கி வாக்குவாதத்தில் ஓட்டுனர்கள் ஈடுபட்ட வேளையில் அரசு பேருந்திலிருந்து கீழே இறங்கி சிலர் நின்று கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் பின்னால் வந்த தனியார்  பேருந்து எதிர்பாராவிதமாக அரசு பேருந்து மீது மோதியுள்ளது. அப்போது கீழே நின்று கொண்டிருந்தவர்களில் மூன்று பேர் மற்றும் காரில் வந்த ஒருவர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த ஐசக் மற்றும் அறந்தாங்கியை சேர்ந்த வெள்ளைச்சாமி, காஞ்சிபுரத்தை சேர்ந்த சர்குணம் ஆகிய 3 பேர் உள்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த 20 பயணிகள்  சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bus accident #Govt bus
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story