பெற்றோர்களே கவனம்..! காருக்குள் விளையாடிய 3 குழந்தைகள் திடீரென மூச்சுத்திணறி பலி..! அடுத்தடுத்து நடந்த பரிதாபம்..!
பெற்றோர்களே கவனம்..! காருக்குள் விளையாடிய 3 குழந்தைகள் திடீரென மூச்சுத்திணறி பலி..! அடுத்தடுத்து நடந்த பரிதாபம்..!
காரில் விளையாடிக்கொண்டிருந்த மூன்று குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம் நடந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி அடுத்த லெப்பை குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் நாகராஜன். இவர் ஒரு ஜேசிபி ஆப்பரேட்டர். இவருக்கு நித்திஷா, நிதிஷ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக நாகராஜ் கோவில் திருவிழாவிற்கு செல்வதற்கு தனது அண்ணனின் நண்பரிடமிருந்து காரை எடுத்து வந்துள்ளார். கோவில் கொடை முடிந்தபின் இவரது வீட்டின் முன்பாக கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் குழந்தைகளுக்கு உணவு அளிக்கும்போது காரில் அமர வைத்து அடிக்கடி உணவு ஊட்டியுள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் குழந்தைகளுக்கு உணவு ஊட்டி விட்டு வீட்டிற்கு சென்ற தாய் திரும்பி வந்து பார்க்கும்போது விளையாடிக்கொண்டிருந்த இரண்டு குழந்தைகளையும் காணவில்லை.
மேலும் பக்கத்து வீட்டு குழந்தையான சுதன் என்பவரது குழந்தையான கபிஷாந்தும் காணாமல் போனதால், அக்கம்பக்கத்தில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தேடியுள்ளனர். இந்த நிலையில் ஆடு மேய்க்கும் தொழிலாளி ஒருவர் காரில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததை தெரிவித்ததை தொடர்ந்து, உடனடியாக வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் பார்த்துள்ளனர்.
காரில் மயங்கிய நிலையில் மூன்று குழந்தைகளும் இருப்பதை கண்டறிந்து காரை உடைத்து குழந்தைகளை மீட்ட பெற்றோர், பணகுடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் முன்பே குழந்தைகள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினருக்கு தெரியவரவே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்பின் தகவலறிந்து வந்த சட்டப்பேரவை தலைவர் அப்பாவு உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362