×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வேலூர்:ஆசிரியரின் வீட்டில் கைவரிசையைக் காட்டி 30 பவுன் நகையை ஆட்டையை போட்ட மர்ம நபர்கள்...

வேலூர்:ஆசிரியரின் வீட்டில் கைவரிசையைக் காட்டி 30 பவுன் நகையை ஆட்டையை போட்ட மர்ம நபர்கள்...

Advertisement

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள எம்.வி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் வில்சன் டேவிட் - மின்னி தம்பதியினர். இவர்கள் இருவரும் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவ தினத்தன்று வழக்கம் போல் இருவரும் வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்றுள்ளனர்.

பள்ளி முடித்து மாலை வீடு திரும்பியுள்ளார் வில்சன் டேவிட். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த டேவிட் உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது, மர்மநபர்கள் தனியறையில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 30 பவுன் நகைளை திருடிச் சென்றது தெரிய வந்தது. அதனையடுத்து இச்சம்பவம் குறித்து மேல்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vellore #30 pounds gold #Abased
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story