×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடப்பாவி.. பச்ச மண்ணுடா.. 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 55 வயது கிழட்டு காமுகன்..!!

அடப்பாவி.. பச்ச மண்ணுடா.. 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 55 வயது கிழட்டு காமுகன்..

Advertisement

தள்ளாடும் வயதில் பச்சிளம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை, இனுங்கூர் காஜா காலனியை சேர்ந்தவர் வழக்கறிஞர் பௌனு பழனியப்பன் (வயது 55). இவர்க்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இருக்கும் நிலையில், கருத்து வேறுபாட்டால் தம்பதிகள் பிரிந்தனர். இரண்டாவது திருமணம் செய்து மனைவியுடன் குடும்பம் நடத்தி வருகிறார். 

பழனியப்பன் சலப எண்ணம் கொண்டவராக இருந்து வந்ததால், சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில், இவரின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் தம்பதியினர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகின்றனர். 

இவர்கள் காலை நேரத்தில் வேளைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு வருவது வழக்கம். இவர்களுக்கு 3 வயதுடைய மகள் இருக்கிறார். அவர் காலையில் அங்கன்வாடிக்கு சென்றுவிட்டு மதியம் வந்து, வீட்டில் தனியாகவே இருப்பார். இதனை நோட்டமிட்ட பழனியப்பன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் வராத வண்ணம் பார்த்துக்கொண்டு பழனியப்பன், சிறுமிக்கு தொடர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் நாளடைவில் சிறுமிக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. சிறுமி மழலை மொழியில் தனக்கு நடந்ததை பெற்றோரிடம் விவரித்து இருக்கிறார். 

பெற்றோர் இதுகுறித்து குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்கறிஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu news #தமிழ்நாடு #3 years old girl #55 years men #கரூர் மாவட்டம் #Karur District
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story