×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இளம் பெண்ணிடம் நாட்டு வெடிகுண்டு, பட்டா கத்தி.. போலீசார் தீவிர விசாரணை.!

இளம் பெண்ணிடம் நாட்டு வெடிகுண்டு, பட்டா கத்தி.. போலீசார் தீவிர விசாரணை.!

Advertisement

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலுசெட்டி சத்திரம் அருகே உள்ள குண்டு குளம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்தால் இருசக்கர வாகனம் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளனர்.

அவர்களை மடக்கி பிடித்த போலீசார் ஒரு பெண் உள்ளிட்ட மூன்று பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அந்தப் பெண் வைத்திருந்த பையில் நாட்டில் வெடிகுண்டு மற்றும் 2 பட்டாக்கத்திகள் இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் உத்திரமேரூர் படுத்த வேடப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இவர்கள் சண்முகம் பெற்றோர் நிலைய கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும், பல்வேறு வழிப்பறி வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதே தெரியவந்தது.

இதனை தொடர்ந்து இவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டு, பட்டாகத்தியை பறிமுதல் செய்த போலீசார், 3 பேயும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kanchipuram #Balusetti palayam #knife #Bomb #kanja
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story