×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பேருந்துக்காக காத்திருந்த 3 பயணிகள்!. கண்ணிமைக்கும் நேரத்தில் அடித்து தூக்கிய லாரி!

3 people died in accident

Advertisement


சென்னை கிண்டியில் இருந்து போரூர் நோக்கி நள்ளிரவில் லாரி ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது மணப்பாக்கத்தில் மின்னல் வேகத்தில் சென்ற லாரி, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து  ஓடியது. அப்போது அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்த 3 பேர் மீது மோதி, பேருந்து நிறுத்த நிழற்குடையில் அடித்து நொறுக்கியபடி நின்றது.

இந்த விபத்தில் பேருந்துக்காக காத்திருந்த 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதனையடுத்து லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் உயிரிழந்த 3 பேரும் ராமா புரத்தில் உள்ள பேக்கிரியில் வேலை செய்து வந்தனர். இவர்கள் மூவரும் சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு பேருந்துக்காக காத்திருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#accident #died
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story