×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆடல் பாடல் நிகழ்ச்சி பார்க்க சென்ற போது ஏற்பட்ட சோகம்.. 3 பேர் பலி.!

ஆடல் பாடல் நிகழ்ச்சி பார்க்க சென்ற போது ஏற்பட்ட சோகம்.. 3 பேர் பலி.!

Advertisement

ஆடல் பாடல் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்ற 3 நண்பர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள சத்திரம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் அன்பரசன் ராஜேந்திரன் லிங்கேஸ்வரன். இவர்கள் மூன்று பேரும் பக்கத்து கிராமத்தில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக நேற்று இரவு சென்றுள்ளனர்.

ஒரே பைக்கில் சென்ற இவர்கள் சாத்தங்குடி விலக்கு அருகே சென்றபோது ராமநாதபுரம் பகுதியில் இருந்து ஒரு வேன் வந்தது. அப்போது எதிர்பாராத நேரத்தில் மோட்டார் பைக்கும், ஆம்னி வேனும் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த அன்பரசன் மற்றும் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் லிங்கேஸ்வரன் உயிரிழந்துள்ளார்.

இதில், ஆம்னி வேன் ஓட்டுநர் பாலமுருகன் தலையில் பலத்து காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஒரே கிராமத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ramanathapuram #Sayalkudi #Dance show #accident
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story