சாலையில் அனாதையாக கிடந்த பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை.! அதிர்ச்சி சம்பவம்.!
அரியலூர் மாவட்டத்தில் பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை அனாதையாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி கிராமத்தில் இயங்கி வரும் குழந்தைகள் காப்பகத்தின் வெளியில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து காப்பகத்தை சேர்ந்தவர்கள் வெளியில் வந்து பார்த்தபோது பிறந்து 3 நாட்களே ஆன பெண் சிசு அனாதையாக கிடந்தபடி அழுதுகொண்டிருந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த காப்பகத்தை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு இதுதொடர்பாக தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் குழந்தையை மீட்டு குழந்தைகள் காப்பகத்தினர் முதலுதவி சிகிச்சை சிகிச்சை அளித்தனர்.
இதுகுறித்து திருமானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண் சிசுவை அனாதையாக விட்டுச் சென்ற தாயை தேடி வருகின்றனர். பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை அனாதையாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362