×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நீங்களே இப்படி செய்யலாமா... ஓடும் ரயிலில் படியில் நின்று செல்பி எடுத்த கல்லூரி மாணவிகள்!!

நீங்களே இப்படி செய்யலாமா... ஓடும் ரயிலில் படியில் நின்று செல்பி எடுத்த கல்லூரி மாணவிகள்!!

Advertisement

நவீன மயமான இந்த உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் செல்போனுக்கு அடிமையாகி விட்டனர். சமூக வலைத்தளங்களில் எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்று வித்தியாசமான வீடியோகள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வைரலாகி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டிய கல்லூரி மாணவிகளே ஓடும் ரயில் படிக்கட்டில் நின்றபடி செல்பி எடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பொதுவாக இளைஞர்கள் தான் அடிக்கடி ஓடும் ரயில், பஸ் போன்றவற்றில் படிக்கட்டில் நின்றபடி செல்ஃபி எடுப்பர்.

இந்நிலையில் தற்போது இளம்பெண்களும் அந்த வரிசையில் வந்து விட்டனர். நேற்று மதியம் 1.45 மணியளவில் மேட்டுபாளைத்திலிருந்து கோவை நோக்கி ரயில் ஒன்று சென்றுள்ளது. அந்த ரயிலானது கோவை அவினாசி ரோட்டில் உள்ள மேம்பாலத்தை தாண்டி சென்ற போது ரயிலில் பயணம் செய்த மூன்று மாணவிகள் திடீரென ஓடும் ரயில் படிக்கட்டில் நின்று செல்ஃபி எடுத்துள்ளனர்.

செல்பி எடுத்தது மட்டுமின்றி ஒரு மாணவி மற்ற இரண்டு மாணவிகளையும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#train #Took selfie #3 college students
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story