ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..! வெளியே நீட்டிக்கொண்டிருந்த பணம்.!
20000 rupees cash left in ATM man handover to police
ஏ.டி.எம் இயந்திரத்தில் விட்டுச்செல்லப்பட்ட பணத்தை, ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க சென்ற நபர் ஒருவர் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
பெரம்பலூர் துறையூர் சாலையில் அமைந்துள்ள SBI வாங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க முயற்சித்துள்ளார். வெகு நேரமாகியும் பணம் வராததால் இயந்திரத்தில் பணம் இல்லையோ என நினைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இந்நிலையில், அந்த ஏ.டி.எம் மையத்திற்கு குரும்பலூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்ற இளைஞர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம் இயந்திரத்தில் ஏற்கனவே 20 ஆயிரம் பணம் வெளியே தள்ளப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியான பிரபாகரன் அந்த பணத்தை மீட்டு பெரம்பலூர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
பிரபாகரனின் இந்த நேர்மையான செயலுக்கு, போலீசாரும், பொதுமக்களும் தங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362