×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சென்னையில் நடிகரின் மனைவியை கட்டிப்போட்டு 200 சவரன் நகை கொள்ளை.! பிடிபட்ட மூன்று நபர்கள்.!

சென்னையில் நடிகரின் மனைவியை கட்டிப்போட்டு 200 சவரன் நகை கொள்ளை.! பிடிபட்ட மூன்று நபர்கள்.!

Advertisement

சென்னை நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி 12-வது தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். ஆர்.கே என அழைக்கப்படும் 54 வயது நிரம்பிய இவர் சினிமா துணை நடிகராக நடித்து வருகிறார். எல்லாம் அவன் செயல், அவன் இவன், அழகர் மலை உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். 

நடிகர் ஆர்.கே-வின் மனைவி ராஜி (48). இவர்களது வீட்டில் நேபாளத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் காவலாளியாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் நடிகர் ராதாகிருஷ்ணன் வெளியே சென்றிருந்தபோது அவருடைய மனைவி ராஜி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மர்மநபர்கள் 3 பேர் திடீரென வீடு புகுந்து ராஜியை கட்டிப்போட்டு, பீரோவில் வைத்து இருந்த 200 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் பணம் க்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். 

இதனையடுத்து வீட்டுக்கு திரும்பி வந்த ஆர்.கே , தனது மனைவி கட்டிப்போடப்பட்டு, நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிசிடிவியை ஆராய்ந்தபோது, கொள்ளையடித்த நபர்களில் ஒருவர் ஆர்.கே வீட்டில் பணியாளராக இருந்த ரமேஷ் என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில், போலீசாரின்  தீவிர தேடுதல் பணியில் ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளான கிருஷ்ணா, கரண் ஆகிய மூன்று பேர் சிக்கியுள்ளனர்.அ வர்களிடம் இருந்து 150 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Actor RK #jewels theft
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story