×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

15, 16 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்; குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறை, ரூ.4 இலட்சம் அபராதம்.!

15, 16 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்; குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறை, ரூ.4 இலட்சம் அபராதம்.!

Advertisement

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவருக்கு அரியலூர் மகிளா நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம், மேலணிக்குழி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 40). இவர் தனது வீட்டருகில் வசித்து வந்த பதின்ம வயது சிறுமிகள் இரண்டு பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்களின் பெற்றோரிடம் தகவலை கூற, அவர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சுப்பிரமணியனை போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 2021ம் ஆண்டில் இருந்து இந்த விஷயம் தொடர்பான விசாரணை அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது. 

இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்ற நிலையில், நேற்று இறுதி தீர்ப்பு வெளியானது. அதன்படி, குற்றவாளி சுப்பிரமணியனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய நீதிபதி ஆனந்தன், ரூ.4 இலட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அவர் திருச்சியில் மத்திய சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #tamilnadu #Sexual Harrasment #2 girls affected #Ariyalur District #அரியலூர் மாவட்டம்
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story