×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

லாரியை முந்த முயற்சித்து உயிரை விட்ட வாலிபர்கள்.. அரசு பேருந்து மோதி பரிதாப பலி..!!

லாரியை முந்த முயற்சித்து உயிரை விட்ட வாலிபர்கள்.. அரசு பேருந்து மோதி பரிதாப பலி..!!

Advertisement

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரின் மகன் வசந்தபிரசாத் (வயது 22). வசந்த பிரசாத்தின் நண்பர் வைத்தியகவுண்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த பூமலை என்பவரின் மகன் யுவராஜ் (வயது 22).

இவர்கள் இருவரும் வாழப்பாடியில் இருந்து பெரிய கிருஷ்ணாபுரம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளனர். இவர்களின் வாகனம் கொட்டவாடி பிரிவு அருகே வந்த போது, லாரியை முந்த முயற்சித்துள்ளனர். 

இதில் ஆத்தூரிலிருந்து சேலம் நோக்கி வந்த அரசுபேருந்து இவர்களின் வாகனம் எதிர்பாராதவிதமாக மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இரண்டு இளைஞர்களும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#2 boys died #தமிழ்நாடு #tamilnadu news #Accident news #government bus #Lorry #bike accident
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story