17 வயது சிறுமியை கடத்தி திருமணம்.. கூண்டோடு தூக்கிய போலீசார்!
17 வயது சிறுமியை கடத்தி திருமணம்.. கூண்டோடு தூக்கிய போலீசார்!
ஊத்தங்கரை அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த விவகாரத்தில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் பூவரசன். 18 வயதான இந்த நபர் டெம்போ ஒட்டி வருகிறார். இவர் அதே கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு சிறுமியின் வீட்டில் மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் சாமல்பட்டி காவல் நிலையத்தில் தனது பெண்ணை கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே பூவரசன் சிறுமியை ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு மனக்கோளத்தில் உள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள் சாமல்பட்டி காவல் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சாமல்பட்டி போலீசார் சிறுமியை கடைசி சென்ற பூவரசன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாயார், அவரது பெரியப்பா ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362