×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிறுமியின் உடலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..!! என்னனு விசாரித்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி..!! சிறுமியை கர்ப்பமாக்கிய 21 வயது இளைஞர் கைது..

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள வாழ்மங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாரதிமோகன். இவரது மகன் பிரபாகரன். 21 வயது ஆகும் பிரபாகரன் அதே பகுதியில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் பிரபாகரன் அந்த பகுதியில் வெளியே சென்று வரும்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

சிறுமியும் பிரபாகரனும் காதலித்து வந்த நிலையில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பிரபாகரன் அந்த சிறுமியுடன் பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதனால் சிறுமி நாளடைவில் கர்ப்பம் அடைந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை அறிந்து கொண்ட அவரது பெற்றோர், இது குறித்து சிறுமியுடன் கேட்டுள்ளனர். அப்போது தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தனது கர்ப்பத்திற்கு காரணம் பிரபாகரன் தான் எனவும், தன்னை ஆசை வார்த்தை கூறி அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து நாக்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Abuse #Crime
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story