×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடக்கொடுமையே... 17 வயது சிறுமி கர்ப்பம்... போக்சோவில் கைது செய்யப்பட்ட அக்கா கணவர்.!

அடக்கொடுமையே... 17 வயது சிறுமி கர்ப்பம்... போக்சோவில் கைது செய்யப்பட்ட அக்கா கணவர்.!

Advertisement

காங்கேயத்தைச் சார்ந்த 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அந்த சிறுமியின் அக்கா கணவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் சூரியநல்லூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞரான பழனிச்சாமி காங்கேயத்தைச் சார்ந்த பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் இவரது மனைவி இரண்டாவது பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்று இருக்கிறார்.

அப்போது மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக சென்று வந்த பழனிச்சாமி மனைவியின் தங்கையான 17 வயது   சிறுமியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த சிறுமி கர்ப்பமாகி இருக்கிறார். இது  கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது அக்கா கணவர் பழனிச்சாமி தான் காரணம் என  தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் நடவடிக்கையில் இறங்கிய காவல் துறையினர் பழனிச்சாமியை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர் .

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #Kangeyam #Child abuse #Crime #Pocso Act
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story