கொடுமையின் உச்சம்... வட மாநிலமாக மாறிக் கொண்டிருக்கிறதா தமிழகம்... 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு.!
கொடுமையின் உச்சம்... வட மாநிலமாக மாறிக் கொண்டிருக்கிறதா தமிழகம்... 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு.!

வட மாநிலங்களில் நடைபெறுவதைப் போன்று கோவை மாவட்டத்தில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த சிறுமி கடத்திச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது நண்பருடன் கோசலம்பாளையம் சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த வழியாக சென்ற ரமேஷ் குமார்(வயது 31), ஜான்சன் (26), பார்த்தீபன் (25) ஆகியோர் சிறுமி மற்றும் அவரது நண்பரிடம் இங்கு ஏன் தனியாக இருக்கிறீர்கள் என விசாரித்துள்ளனர்.