#Breaking: 16 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை வெளுத்து வாங்கப்போகும் மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
#Breaking: 16 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை வெளுத்து வாங்கப்போகும் மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தமிழகத்திற்கு பெருவாரியான மழைRain Alerயை தரும் வடகிழக்கு பருவமழை அக். 22ம் தேதி முதல் அக்.25ம் தேதிக்குள் தொடங்க சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதேபோல், இன்றைய நாளில் வளிமண்டலத்திற்கு மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக பல தமிழ்நாடு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியிருந்தது.
இந்நிலையில், அடுத்த 3 மணிநேரத்திற்கு, இரவு 10 மணிவரையில் நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், கரூர், மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இதுதான் கூடிய லேசான மழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.