×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நொடிப்பொழுதில் இப்படி ஆகிருச்சே! தண்ணீரை சூடுபடுத்திய சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்! கதறும் பெற்றோர்கள்!

நொடிப்பொழுதில் இப்படி ஆகிருச்சே! தண்ணீரை சூடுபடுத்திய சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்! கதறும் பெற்றோர்கள்!

Advertisement

வாட்டர் ஹீட்டரில் தண்ணீர் சூடுபடுத்திய போது, திடீரென அதற்குள் கை வைத்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோவிலம்பாக்கம், சத்யா நகரில் வசித்து வருபவர் பிரகாஷ். இவரது மகன் ஷியாம். 15 வயது நிறைந்த இவர் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் ஷியாம் இன்று குளிப்பதற்காக மின்சார வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தி தண்ணீரை சூடு செய்துள்ளார்.

பின்னர் திடீரென அந்த சிறுவன் தண்ணீர் சூடாகி விட்டதா என தண்ணீருக்குள் கையை விட்டு பார்த்துள்ளார். அப்பொழுது அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து மயங்கிக் கீழே விழுந்துள்ளார். அதனை கண்டு பதறிப்போன ஷியாமின் பெற்றோர்கள் உடனே அவரை தூக்கிகொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். அதனைக் கேட்டதும் பெற்றோர்கள் கதறி துடித்தனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Water heater #dead #Current
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story