×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மீண்டும் ஒரு சவர்மா மரணம்... 13 பேர் மருத்துவமனையில் அனுமதி.! ஷாக்கிங் ரிப்போர்ட்.!

மீண்டும் ஒரு சவர்மா மரணம்... 13 பேர் மருத்துவமனையில் அனுமதி.! ஷாக்கிங் ரிப்போர்ட்.!

Advertisement

சாலையோர உணவகத்தில் சவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தீவிரமான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல்லில் உள்ள  ஒரு உணவகத்தில் சவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமிக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் அதே உணவகத்தில் சாப்பிட்ட 13 பேர் உடல் உபாதைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் உணவகத்தில் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பும் சவர்மா சாப்பிட்ட நபர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உணவு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் பல்வேறு விதிமுறைகளை விதித்திருந்த நிலையில் மீண்டும் சவர்மா சாப்பிட்ட ஒரு சிறுமி உயிர் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #namakkal #Shawarma #girl dead #14 hospitalized
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story