×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கண்டெய்னர் லாரியும், சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! துடிதுடித்து 13 பேர் பலி!

13 people died in accident

Advertisement

திருப்பூர் மாவட்டம் அவினாசி தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரியும், கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 13 பேர் பலியாகினர்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், கோர விபத்து ஏற்பட்டு பலர் பலி ஆகியுள்ளனர். பெங்களூரில் இருந்து  திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும், கோவையிலிருந்து சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.  

அங்கு நடந்த கோர விபத்தில், பேருந்து நிலைகுலைந்து பேருந்தில் பயணம் செய்த 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தேசிய நெடுஞ்சாலையில், விபத்து ஏற்பட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bus accident #kerala bus #died
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story