12 ஆம் வகுப்பு மாணவிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்த நபர்.! மாணவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 19). கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 19). கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பரின் பிறந்த நாள் விழா கோவளத்தில் உள்ள பண்ணை வீட்டில் நடந்தது. பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக தன்னுடைய நண்பர்கள் மற்றும் தேனாம்பேட்டையை சேர்ந்த தோழியான 17 வயதான 12 ஆம் வகுப்பு மாணவியை அழைத்து கொண்டு சென்றுள்ளார்.
பிறந்த நாள் விழா முடிந்ததும் சந்தோஷின் நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் திரும்பி விட்டனர். ஆனால் சந்தோசும், 12 வகுப்பு மாணவியும் தனிமையில் இருந்தனர். அப்போது சந்தோஷ் அந்த மாணவிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்துள்ளார்.
சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்த அந்த மாணவியை சந்தோஷ் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
மயக்கம் தெளிந்த மாணவி நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து வீட்டிற்கு சென்ற மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து அவரது தாயிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய தாயார் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சந்தோஷை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய விசாரபினையில், அவர் பிறந்த நாள் விழாவில் குளிர்பானத்தில் மதுபானம் கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, போலீசார் கல்லூரி மாணவன் சந்தோஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362