×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அண்ணன்- தம்பி சேர்ந்து போட்ட காம வெறியாட்டம்! தலை சிதைந்து பலியான 11 ஆம் வகுப்பு மாணவி.

11th standard girl student killed in Madurai usilampati

Advertisement

11 ஆம் வகுப்புப் படிக்கும் மாணவி ஒருவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு திருவிழா கொண்டாடுவதற்கா சென்றுள்ளார். இந்நிலையில் பாட்டி வீட்டுக்கு சென்றிருந்த மாணவி அருகில் இருக்கும் பம்பு செட் ஒன்றிற்கு தண்ணீர் எடுப்பதா சென்றுள்ளார்.

தண்ணீர் எடுக்க சென்ற மாணவியை நீண்ட நேரமாகியும் காணாததால் உறவினர்கள் தேடி சென்றுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் மாணவி கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனை அடுத்து போலீசாருடன் இணைந்து உறவினர்கள் தேடியதில் அருகில் இருந்த புதரில் சாக்கு மூட்டையில் இருந்து மாணவி சடலமாக மீட்கப்பட்டார்.

இதனை அடுத்து அந்த பகுதியில் வசித்துவரும் மாதவன் எனபவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். முதலில் தாங்கள் இருவரும் காதலித்ததாகவும், மாணவி திருமணத்திற்கு மறுத்ததால் அவரை கொலை செய்ததாக மாதவன் கூறினார். ஆனால் இதனை நம்பாத போலீசார் அவரிடம் மேலும் விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.

பம்பு செட்டுக்கு தண்ணீர் எடுக்க சென்ற மாணவியை மாதவனும் அவரது தம்பியும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததோடு மாணவியின் கழுத்தை நெரித்தும், அவரது தலையில் கல்லை போட்டும் கொன்றுள்ளனர். இரட்டையர்களான மாதவனும் அவரது தம்பியும் சேர்ந்து செய்த இந்த கொடூர செயல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #Crime news #Madurai crime
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story