×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சென்னை: தண்ணீர் லாரி மோதி 11 வயது பள்ளி மாணவன் உயிரிழப்பு... கதறும் பெற்றோர்!!

சென்னை: தண்ணீர் லாரி மோதி 11 வயது பள்ளி மாணவன் உயிரிழப்பு... கதறும் பெற்றோர்!!

Advertisement

வேளச்சேரி சித்தாலப்பாக்கம், இந்திரா நகர், மசூதி தெருவை சேர்ந்தவர் ரத்தினம். இவருக்கு பேரரசு என்ற 11 வயதில் மகன் உள்ளார். பேரரசு அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 6 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்று வருமாறு தாய் கூறியதை அடுத்து அருகே இருந்த கடைக்கு சென்றுள்ளான் பேரரசு.

கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த வேலையில் அவ்வழியாக அதிவேகத்தில் வந்த தண்ணீர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சிறுவன் பேரரசு மீது மோதியுள்ளது. அதில் உடல் நசுங்கி சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த லாரி டிரைவர் லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார். 

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவர் மணியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#11 years old boy #accident #Velachery
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story