×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சைக்கிள் ஓட்டிய சிறுவன் மின்சாரம் தாக்கி பலி.. விடுமுறையில் ஊருக்கு போன இடத்தில் பரிதாபம்..! நெஞ்சை உலுக்கும் சோகம்..!!

சைக்கிள் ஓட்டிய சிறுவன் மின்சாரம் தாக்கி பலி!,..லீவுக்கு ஊருக்கு போன இடத்தில் பரிதாபம்..!

Advertisement

திண்டுக்கல் அருகே மின்சாரம் தாக்கியதில் திருவையாறை சேர்ந்த 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் மணியரசன்(11). இவர் அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் ஆறாம் ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், மணியரசன் கடந்த சில நாட்களுக்கு முன் திண்டுக்கல் மாவட்டம் அழகம்பட்டியில் உள்ள தனது பெரியப்பா தங்கவேலுவின் வீட்டிற்கு பள்ளி விடுமுறை காரணமாக வந்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று வீட்டின் அருகே மணியரசன் சைக்கிள் ஓட்டி விளையாடி கொண்டிருந்தார், அப்போது, எதிர்பாரத விதமாக அருகில் உள்ள மின்கம்பியை மணியரன் பிடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் துக்கிவீசப்பட்டார். மயங்கிய நிலையில் கிடந்த, மணியரசனை உறவினர்கள்  நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு மணியரசனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மணியரசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின் பேரில், அம்மைய நாயக்கனுர் காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dindigul #Thiruvaiyaru #Struck by electricity #11 years ols Boy #Death by electric shock
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story