11 வயது சிறுமி கற்பழித்து படுகொலை.!! தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறை.!!
11 வயது சிறுமி கற்பழித்து படுகொலை.!! தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறை.!!
மதுரையைச் சேர்ந்த 11 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இறந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி இருக்கிறது.
மதுரை கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி அவரது வீட்டின் கழிவறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுமியை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.