×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தேர்வு பயத்தில் 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை.. போலீஸார் தீவிர விசாரணை.!

தேர்வு பயத்தில் 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை.. போலீஸார் தீவிர விசாரணை.!

Advertisement

கோவை வடவள்ளி அருகே, 16 வயது சிறுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வடவள்ளி பழனி கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம்  இவர் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவருடைய மகள் பிரதீஷா(16) இவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். 

தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடந்து வரும் நிலையில், பிரதீஷா இரண்டு தேர்வுகள் எழுதியுள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த மாணவி பிரதீஷா திடீரென தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான அவரது பெற்றோர் பிரதீஷாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரதீஷா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறி, காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வடவள்ளி போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மாணவி ஏன் தற்கொலை செய்து கொண்டார், தேர்வு கடினமாக இருந்ததால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Commits Suicide #Coimbatore #10th student #Vadavalli
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story