×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பள்ளி மாணவியை தனியாக அழைத்துச் சென்று நண்பனுடன் சேர்ந்து இளைஞன் செய்த செயல்! மருத்துவ சோதனையில் தெரிந்த உண்மையால் பதறிப்போன பெற்றோர்!

10th class student abused by 2 yuong boys

Advertisement

சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுகா கொங்கணாபுரம் புதுப்பாளையம் ஊராட்சி சின்ன முத்தையாபட்டி பகுதியை சேர்ந்த 15 வயது நிரம்பிய 10-ஆம் வகுப்பு மாணவியிடம், அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் நட்பாக பழகியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன் மாணவியை தனியாக அழைத்துச் சென்ற அவர், தனது நண்பருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். இதனையடுத்து  மாணவி பயத்தில் அதைப் பற்றி யாரிடமும் கூறாமல் இருந்த நிலையில், மாணவியின் வயிறு பெரிதாகிக் கொண்டே சென்றதால், பெற்றோர் மாணவியிடம் கேட்டுள்ளனர்.

ஆனால் மாணவி சரியாக பதில் அளிக்காததால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்த போது, அவர் 3 மாதம் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியிடம் இது குறித்து கேட்ட போது, தன்னை புதுப்பாளையம் சின்னமுத்தியம்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் தமிழரசன் ஆகியோர் பலாத்காரம் செய்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து மாணவியின் பெற்றோர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வெங்கடேஷ், தமிழரசன் ஆகியோர் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசை நேற்றிரவு கைது செய்தனர். மேலும் தமிழரசனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#school girl #abused
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story