×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

108 ஆம்புலன்சை கால் செய்து வரவழைத்த போதை ஆசாமி; கணவரை வெளுத்து வாங்கிய மனைவி...!!

108 ஆம்புலன்சை கால் செய்து வரவழைத்த போதை ஆசாமி; கணவரை வெளுத்து வாங்கிய மனைவி...!!

Advertisement

குடிபோதையில் 108 ஆம்புலன்ஸை அழைத்த நபரை அவரது மனைவி அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாமக்கல் சிட்கோ காலனியை சேர்ந்தவர் முருகேசன்(55), இவர் குடிபோதையில்  சாலை விபத்தில் அடிபட்டு விட்டேன் எனக் கூறி 108 ஆம்புலன்சை அழைத்துள்ளார். இதனால் நாமக்கல் திருச்சி சாலையில் இருந்து விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை பரிசோதித்தனர் அப்போது அவர் குடிபோதையில் இருந்ததும், எந்த வாகனமும் அவரை இடிக்க வில்லை என்பதும் தெரியவந்தது.

இந்நிலையில், அவருடைய மனைவி அங்கு வந்து 108 ஆம்புலன்ஸை ஏன் அழைத்தாய் என்றும் அவர்கள் உயிர் காக்கும் சேவகர்கள். அவர்கள் மற்றவர்களுக்கு சேவை செய்ய செல்லும் நேரத்தை நீ குடி போதையில்  வீனடிக்கிறாய் கூறி கணவரை அடி வெளுத்து வாங்கினார். மனைவி செய்த அர்ச்சனையால், போதை இறங்கி தலை தெறிக்க முருகேசன் அங்கிருந்து ஓடினார்.

மேலும், அங்கிருந்தவர்கள் போலீஸ் வருகிறார்கள் எனக் கூறியதை தொடர்ந்து, முருகேசன் பைக்கில் ஏறி மாயமானார். குடிபோதையில் ஆம்புலன்ஸ் அழைத்து தொல்லை கொடுத்த கணவனை அர்ச்சனை செய்து ஓடவிட்ட  மனைவியால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #N #namakkal #A drug addict who called an ambulance #Attacked Drunken Husband
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story