×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

# Big Breaking மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ்.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளிகள் இயக்கப்படாமல் உள்ளன.

Advertisement

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளிகள் இயக்கப்படாமல் உள்ளன. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்தாண்டு 9,10,11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி நிச்சயம் நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தொடக்கக் கல்வி இயக்குநர் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கு அமலில் இருப்பதால் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபின், பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும்.

தமிழகத்தில் 2020-21 ஆம் கல்வி ஆண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். மேலும், மேலும், பள்ளிகள் திறந்தவுடன் இலவச பாடப்புத்தகங்கள், இதர நலத்திட்டங்கள் வழங்குவது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#school #All pass
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story