என்னா ஒரு ஸ்பிடூ... பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது திடீரென வந்த எமன்! தூக்கி வீசப்பட்ட கொடூரம்... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!!!
வதோதராவில் ஒரே இருசக்கர வாகனத்தில் 3 பேர் அதிவேகமாக சென்றபோது சாலையை கடக்க முயன்ற இருவர் மீது மோதியதில் ஒருவர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார்.
வதோதராவில் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் சாலையைக் கடக்க முயன்ற இரு பாதசாரிகள் மீது மோதியது. மகேஷ் காம்ப்ளக்ஸ் அருகே காலாதர்ஷன் சார் ரஸ்தா நோக்கி சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த இருவரில் ஒருவர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூன்று பேர் சென்ற இருசக்கர வாகனம்
தகவலின்படி, இருசக்கர வாகனத்தில் விதிகளை மீறி மூன்று பேர் பயணித்துள்ளனர். அதேநேரத்தில், வாகனம் அதிவேகமாகவும் சென்றதாக கூறப்படுகிறது. அதிக நபர்கள் பயணித்ததால் வாகனத்தின் கட்டுப்பாடு குறைந்ததுடன், திடீரென பிரேக் போடுவதிலும் சிரமம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
இதையும் படிங்க: இதெல்லாம் தேவையா? ரீல்ஸ் மோகத்தால் 30 அடி அணையில் இருந்து குதித்து இளைஞர்! இறுதியில் நேர்ந்த அதிர்ச்சி.... நெஞ்சை பதறவைக்கும் காட்சி..!!!
பாதசாரிகள் மீது மோதிய வாகனம்
சாலையைக் கடக்க முயன்ற இருவரை நோக்கி வந்த வாகனம் வேகத்தை குறைக்க முடியாமல் அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சாலை விதிகளை கடைப்பிடிக்க வலியுறுத்தல்
சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிவேக வாகன ஓட்டம் மற்றும் ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்வது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். சாலையில் செல்லும்போது வேகத்தை கட்டுப்படுத்துவதுடன், சாலை விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பதே இந்த விபத்து உணர்த்தும் முக்கிய எச்சரிக்கையாக உள்ளது.