×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்..! சாப்பிடும் ஆண்கள் மாடாக பிறப்பார்களாம்.!

Swami dassji talk about women

Advertisement

மாதவிடாய் காலத்தில் சமையல் செய்யும் பெண்கள் அடுத்த பிறவியில் நாயாகப் பிறப்பார்கள் என்று சுவாமி கிருஷ்ணஸ்வரூப் தாஸ்ஜி பேசியிருப்பதற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் உள்ள சுவாமி நாராயண் கோயிலைச் சேர்ந்த சுவாமி கிருஷ்ணஸ்வரூப் தாஸ்ஜி ஆற்றும் சொற்பொழிவுகள் பல அந்தக் கோயிலின் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில், அவர் சொற்பொழிவு ஆற்றும் விடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில் சுவாமி கிருஷ்ணஸ்வரூப் தாஸ்ஜி பேசுகையில்,  மாதவிடாய்க் காலத்தில்  பெண்கள் சமைத்த உணவை உண்டால் ஆண்கள் அடுத்த பிறவியில் காளை மாடுகளாகப் பிறப்பார்கள் என்றும், மாதவிடாய் நாள்களில் கணவருக்காக உணவைச் சமைத்தால் பெண்கள் நிச்சயம் அடுத்த பிறவியில் பெண் நாய்களாகத்தான் பிறப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

நான் கூறுவது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் எனக்குக் கவலையில்லை. ஆனால், இவையனைத்தும் சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே ஆண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என அவர் பேசியிருப்பது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#swami #Women cook
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story