×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

துன்பத்தை நீக்கும் சனிப்பிரதோஷம்.. ஆன்மீக பக்தர்களே தெரிஞ்சிக்கோங்க.!

Shani Pradosham: சனிப்பிரதோஷத்தின்போது சிவாலயத்தில் தரிசனம் செய்தால் நன்மைகள் கிடைக்கும்.

Advertisement

ஈசனை வழிபட்டு நமசிவாய மந்திரம் சொல்வதால் முன்ஜென்ம பாவங்கள் நீங்கும்.

சனிப்பிரதோஷம்:

சனிக்கிழமை வரும் பிரதோஷத்தை சனி பிரதோஷம் எனக் குறிப்பிடுவர். இந்த நாளில் சிவாலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ளும் வாய்ப்பு மிக முக்கியமாக கருதப்படுகிறது. சனி பிரதோஷத்தில் திருச்சிவாலயத்தை தரிசனம் செய்தால், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு தினமும் சிவாலயத்திற்கு சென்ற புண்ணியம் பெறும் என்று சிவனடியார்கள் கூறுவர்.

இதையும் படிங்க: இந்த பேங்குகளில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா.? அப்போ சிரமம் தான்.!

விரதம் இருந்து வழிபடுங்கள்:

சாதாரண பிரதோஷ வழிபாடுகள் வழங்கும் பலன்களைவிட, சனி பிரதோஷம் எண்ணற்ற பலன் தரக்கூடியது. இந்த நாளில் ஈஸ்வரனை வணங்குவதோடு, சனீஸ்வரனையும் விரதம் இருந்து வழிபடுவதால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.

சனி பிரதோஷ நாளில், சிவாலயத்தில் "ஓம் நமச்சிவாய" மந்திரத்தை 108 முறைகள் சொல்லி வழிபடுவது நல்லது. இதன் மூலம் ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் மற்றும் முன்னோர்களால் ஏற்பட்ட பாதகங்கள் நீங்கும்.

இதையும் படிங்க: செவ்வாய் பெயர்ச்சி ஜனவரி 16 ஆம் தேதி! இந்த 5 ராசியினருக்கு இரட்டிப்பாகும் நன்மைகள்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Spiritual Tips #ஆன்மிகம் #சனிப்பிரதோஷம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story