சபரிமலையில் இன்று முதல் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி.!
சபரிமலையில் இன்று முதல் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு , பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தினமும் 2 ஆயிரம் பக்தர்களும், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் 3 ஆயிரம் பக்தர்களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மண்டல பூஜை எதிரொலியாக கூடுதல் பக்தர்களை அனுமதிக்குமாறு கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், தினமும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட்டது. இந்தநிலையில் இன்று முதல் நாள்தோறும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளில் எந்த தளர்வும் இல்லை என்றும், தரிசனத்திற்கு வருவோர் முகக்கவசம், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் கொண்டுவரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362