குடும்ப பெண்கள் மறந்தும் இந்த 5 விஷயங்களை வேறு யாருக்கும் செய்யாதீங்க! எச்சரிக்கும் புத்தர்...
பெண்கள் தவிர்க்க வேண்டிய புத்தரின் 5 எச்சரிக்கைகள் பற்றி இக்கட்டுரை விவரிக்கிறது. ஆன்மீகம், புத்தரின் போதனைகள் மற்றும் பெண்களின் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டது.

பாரத கண்டத்தில் அமைந்துள்ள இந்தியாவின் மத்தியப் பகுதியில், சாக்கியர்களின் பிரமாண்ட நகரமாக கபிலவஸ்து இருந்தது. இந்த நகரத்தில் ஜயசேனன் என்ற அரசன் ஒருகாலத்தில் ஆட்சி செய்தார். அவருக்கு பிறந்த சிம்மஹணு, பின்னர் அரசராக உயர்ந்தார்.
சிம்மஹணுவுக்கு ஐந்து மகன்கள் – சுத்தோதனர், சுல்லோதனர், தோதோதனர், அமிதோதனர், மிதோதனர் மற்றும் இரண்டு மகள்கள் – அமிதை, பிரமிதை ஆகியோர் பிறந்தனர்.
அவர்களில் சுத்தோதனர் மூத்தவராக இருந்ததால், பின் அவரே அரசராக ஆட்சி செய்தார்.
புத்தரின் குடும்பம் மற்றும் பிறப்பு
சுத்தோதனரின் முதல் மனைவி மஹாமாயா தேவி மகனாக சித்தார்த்தர் என்பவரை பெற்றார். இளைய மனைவி பிரஜாபதி கௌதமி நந்தன் மற்றும் நந்தை எனும் இரு பிள்ளைகளை பெற்றார்.
இதையும் படிங்க: ஆபத்து நெருங்கும் சவால்கள்.. இன்று இந்த ராசியினர் மட்டும் ரொம்ப கவனமாக இருக்கணுமாம்! உங்க ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
சித்தார்த்தர், பின்னர் ஞானம் அடைந்து புத்தராக ஆனார். இப்படி புத்தரின் வாழ்க்கை வரலாற்று நம்மை சுவாரஸ்யப்படுத்தும் அளவுக்கு சென்றுக் கொண்டே இருக்கும்.
புத்தமதத்தின் பரவல்
புத்த மதம், இன்று கிழக்காசிய நாடுகளில் பரவலாக இருக்கிறது. இந்தியாவிலும் புத்தரின் போதனைகள் மக்களுக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அவரது நெறிமுறைகள் எளிமையானவையும், தெளிவானவையும் ஆகும்.

பெண்கள் தவிர்க்க வேண்டிய 5 முக்கியமான அம்சங்கள்
புத்தரின் போதனைகள் அடிப்படையில், பெண்கள் எளிதில் தவறும் ஐந்து விஷயங்களைப் பற்றி காண்போம்:
மாயை போன்ற வேஷங்கள்
பெண்களின் அழகு மற்றும் வார்த்தைகள் சில நேரங்களில் மனதை மயக்கும் சக்தியுடன் இருக்கும். ஆனால், அந்த வேஷங்களில் சிக்கிக்கொள்வது வாழ்க்கையை பாதிக்கக்கூடியது என்பதை புத்தர் எச்சரிக்கிறார்.
பற்றுதல்
"எனது" என்ற பற்று, மனிதனை துன்பத்திற்கு இட்டுச் செல்கிறது. காதல், உறவு போன்ற பகுதிகளில் மனதை கட்டுப்படுத்தும் பழக்கம் அவசியமாகும்.
காம ஆசை
காமம், புத்தரின் கருத்துப்படி மனதை திசைதிருப்பும் முதன்மைத் தூண்டுதல் ஆகும். இது அமைதியை கெடுத்து ஞானத்தையே தொலைக்கும். ஆகவே, பெண்கள் இந்த உண்மையை நன்கு புரிந்து கொள்வது முக்கியம்.
சந்தேகம்
உறவுகளிலும் அன்பிலும் சந்தேகம் வந்தால் நிம்மதி சிதையும். புத்தர் மனஅமைதி முக்கியம் என்பதையும், சந்தேகம் ஏற்படாத சூழலை உருவாக்குவதும் அவசியம் என கூறுகிறார்.
தன்னலம்
தன்னலமான செயல்கள், பொறாமை, ஒழுக்கமின்மை போன்றவை அனேக இடையூறுகளை ஏற்படுத்தும். புத்தர், இந்த பண்புகளை கடுமையாக விமர்சிக்கிறார். மனிதனாக பிறந்தவர்கள் சமத்துவமான எண்ணத்தில் இருக்க வேண்டும்.
இந்த பதிவில் உள்ள தகவல்கள் ஆன்மீக நூல்கள், நம்பிக்கைகள் மற்றும் மூலங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை. வாசகர்களின் நலனுக்காக மட்டுமே பகிரப்படுகிறது.