2026 ஹோலாஷ்டக் காலம் தொடக்கம்! மிதுனம் முதல் மீனம் வரை.....அடுத்த 8 நாட்கள் இந்த 5 ராசிகளுக்கு சோதனை நிறைந்த காலம்! தப்பிக்க இதுதான் வழி.....!!!
2026 ஹோலாஷ்டக் காலம் தொடக்கம்: மிதுனம் முதல் மீனம் வரை 5 ராசிக்காரர்கள் கவனம்! கிரக நிலைகள், சவால்கள் மற்றும் ஜோதிட எச்சரிக்கை விவரம்.
வேத ஜோதிட மரபில் முக்கியத்துவம் பெறும் ஹோலாஷ்டக் காலம் 2026 ஆம் ஆண்டில் பிப்ரவரி 24 முதல் தொடங்கியுள்ளது. ஹோலிப் பண்டிகைக்கு முன்பாக வரும் இந்த எட்டு நாட்கள் சுப காரியங்களுக்கு ஏற்றதல்ல எனக் கூறப்படுகிறது. குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த காலத்தில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதே ஜோதிடர்களின் கருத்தாக உள்ளது.
ஹோலாஷ்டக் காலத்தின் ஜோதிட முக்கியத்துவம்
வேத ஜோதிடத்தின்படி, சூரியன், சனி, குரு, ராகு, கேது உள்ளிட்ட ஒன்பது கிரகங்களும் இந்த காலகட்டத்தில் உக்கிர நிலையை அடைவதாக நம்பப்படுகிறது. அதனால் திருமணம், புதிய தொழில் தொடக்கம், வீடு வாங்குதல் போன்ற சுப காரியங்களை தவிர்க்க வேண்டும் என்பது ஐதீகம்.
மிதுன ராசி – நிதி சிக்கல்கள் அதிகரிக்கலாம்
மிதுன ராசியினருக்கு இந்த காலம் சற்றுக் கடினமாக அமையக்கூடும். குரு பகவான் வக்ர நிலையில் இருப்பதும், ராகு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பதும் நிதி தொடர்பான அழுத்தத்தை உருவாக்கலாம். தேவையற்ற செலவுகள், கடன் சுமைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் இருமுறை யோசிப்பது அவசியம்.
இதையும் படிங்க: 2026 ன் முதல் சந்திர கிரகணம்... இந்த மூன்று ராசிகாரர்கள் எச்சரிக்கையாக இருக்கணுமாம்!!!
கடகம் & சிம்மம் – பொறுமை முக்கியம்
கடக ராசியினர் வாகனப் பயணங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் பயணங்களைத் தவிர்ப்பது பாதுகாப்பாக இருக்கும். சிம்ம ராசியினருக்கு பணியிடத்தில் தன்னம்பிக்கை குறைவு மற்றும் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் உருவாகலாம். கேதுவின் சஞ்சாரம் செயல்களில் கவனச்சிதறலை ஏற்படுத்தக்கூடும்.
கும்பம் – தொழில் தடைகள்
ஏழரை சனியின் தாக்கத்தில் இருக்கும் கும்ப ராசியினருக்கு, ராசி அதிபதி சனி அஸ்தமன நிலையில் இருப்பது கூடுதல் சவால்களை தரலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் தடை, குடும்ப உறவுகளில் மனக்கசப்பு போன்றவை உருவாகலாம். அமைதியான அணுகுமுறை மட்டுமே பிரச்சினைகளை குறைக்கும்.
மீனம் – முடிவெடுப்பில் தாமதம்
மீன ராசியினருக்கு இந்த காலத்தில் மனஉளைச்சல், தனிமை உணர்வு அதிகரிக்கலாம். புதிய கடன் அல்லது முதலீடு செய்வதை தற்காலிகமாக ஒத்திவைப்பது நல்லது. முடிவெடுக்கும் முன் குடும்ப ஆலோசனை பெறுவது பயனுள்ளதாக இருக்கும்.
மொத்தத்தில், ராசி பலன் அடிப்படையில் இந்த எட்டு நாட்கள் ஐந்து ராசிக்காரர்களுக்கு சவால்களை தரக்கூடியதாக கருதப்படுகிறது. எனினும், பொறுமை, இறைநம்பிக்கை மற்றும் நிதானமான செயல்பாடு இருந்தால் கிரகங்களின் சீற்றத்தை சமாளிக்க முடியும் என்பதே ஜோதிட நம்பிக்கையாகும்.
இதையும் படிங்க: சனி -சந்திரன் சேர்க்கையால் இந்த 5 ராசிகளுக்கும் உருவாகும் விஷ யோகம்! ஆபத்தில் இருந்து தப்பிக்க இதுதான் வழி !!!