×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அத்திவரதரை நின்றகோலத்தில் தரிசனம் செய்ய காத்திருப்பவர்களுக்காக, இதோ மகிழ்ச்சியான தகவல்!!

athivarathar temple latest announcement

Advertisement

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர்  40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தருகிறார். அந்த வகையில் தற்போது இந்த ஆண்டு மிகவும் கோலாகலமாக தரிசனம் நடைபெற்று வருகிறது.

மேலும் கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதியில் இருந்து அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அவரை தரிசனம் செய்ய இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடிவருகின்றனர். இந்நிலையில் காஞ்சீபுரத்தில் அத்திவரதர் தரிசனத்துக்கு, ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் தரிசனத்துக்கு 2 நாட்களுக்கு முன்பே, முன்பதிவு செய்து காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரையிலும் தரிசனம் செய்யலாம் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வரும் ஆகஸ்டு  1ம் தேதி முதல் 17 ம் தேதி வரை நின்ற கோலத்தில் அத்திவரதர் தரிசனம் தருவார் என்றும், 18 ம் தேதி அதிகாலை அத்திவரதர் சிலை மீண்டும் குளத்தில் வைக்கப்படும் என்றும் அறநிலையத்துறை தரப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#atthivarathar #kanchipuram
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story