ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு தடை! ஜசிசி அதிரடி நடவடிக்கை
Zimbabwe suspended from icc
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இடம்பெற்று சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் ஆடி வந்த ஜிம்பாப்வே அணியை தடை செய்வதாக ஐசிசி நேற்று அறிவித்துள்ளது.
1990 களில் சிறப்பான அணியாக உருவெடுத்த அணிகளில் ஒன்று ஷிம்பாப்வே. ஆண்டி ப்ளவர், கிராண்ட் ப்ளவர், காமபெல், ஒலாங்கா என பல நட்சத்திர வீரர்களை கொண்ட அணியாக இருந்தது ஜிம்பாப்வே. அதன்பின் உள்நாட்டு அரசியல் காரணமாக அந்த அணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன.
அதனைத் தொடர்ந்து முக்கியமான ஐசிசி தொடர்களின் தகுதி சுற்றில் கூட ஜிம்பாப்வே அணியால் வெல்ல முடியவில்லை. மேலும் உள்நாட்டு அரசியல் குழப்பங்களால் ஜிம்பாபவே அணியால் ஐசிசியின் விதிமுறைகளை கடைபிடிக்க முடியவில்லை.
இவை அனைத்தையும் காரணமாக காட்டி ஜிம்பாப்வே அணியை ஐசிசி அளவில் இருந்து தடை செய்வதாக நேற்று நடந்த ஐசிசி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி ஜிம்பாப்வே அணியால் சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362